Tamil Audio Books

நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன ?

Informações:

Sinopsis

இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஹர்ஷத் மேத்தா நிரவ்மோடி டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) சாரதா சிட்ஃபண்ட்ஸ் சந்தா கோச்சார் கார்வி கேதன் பரேக் எ.பி.ஜி ஷிப்யார்ட் கிங் பிஷர் நிதி மோசடி மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: N. Gopalakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment