Sinopsis
Greetings. Vanakkam.You will find a collection of Tamil literary works in our podcastA good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also have provided the English translation/ meaningIn addition to that we have short stories read by Sri based on material from Thendral tamil magazine ( USA ) and Excerpts from our Tamil audio books for the benefit of fans who enjoy literary works
Episodios
-
1975 Emergency அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன
19/07/2024 Duración: 01h13min1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam https://play.google.com/store/audiobooks/details/R_Radhakrishnan_1975_Emergency_Nerukkadi_nilai_Pra?id=AQAAAEDS2guayM Subtitle: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் Series Name: Not Set Series Entry: Not Set Description: இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட
-
சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது
17/07/2024 Duración: 09minVinayak Damodar Savarkar https://play.google.com/store/audiobooks/details/Saadhu_Sriram_Vinayak_Damodar_Savarkar?id=AQAAAEDSSCwI7M விநாயக் தாமோதர் சாவர்க்கர் Series Name: Not Set Series Entry: Not Set Description: சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பத
-
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை
16/07/2024 Duración: 07minநடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் https://play.google.com/store/audiobooks/details/Sudhakar_Kasturi_Natesa_Pillaiyin_Naatkurippukal?id=AQAAAEDSSkwKjM Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புர
-
‘புத்தரின் ஜாதகக் கதைகள் - நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன
15/07/2024 Duración: 04minhttps://play.google.com/store/audiobooks/details/Latha_Kuppa_Buddharin_Jataga_Kathaigal?id=AQAAAEDSOhB60M Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality புத்தரின் ஜாதகக் கதைகள் புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்டதுதான் ‘புத்தரின் ஜாதகக் கதைகள்.’ புத்தரின் ஜாதகக் கதைகளில் முக்கியமான கதைகள் எளிமையான வடிவில் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. லதா குப்பா ஜாதகக் கதைகளின் அடிநாதத்தைச் சிதைக்காமல் இக்கதைகளை எழுதி உள்ளார். எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Latha Kuppa Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment
-
நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன ?
13/07/2024 Duración: 01h02minஇந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஹர்ஷத் மேத்தா நிரவ்மோடி டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) சாரதா சிட்ஃபண்ட்ஸ் சந்தா கோச்சார் கார்வி கேதன் பரேக் எ.பி.ஜி ஷிப்யார்ட் கிங் பிஷர் நிதி மோசடி மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: N. Gopalakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment
-
ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு
12/07/2024 Duración: 05minGet it on Google play https://play.google.com/store/audiobooks/details/Latha_Kuppa_Ramayana_Kathaigal?id=AQAAAEDSOiB64M Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality ராமாயணக் கதைகள் பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம். லதா குப்பாவின் முதல் புத்தகமான 'மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம். எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Author: Latha Kuppa Narrator: Sukanya Karunakaran Publisher: Itsdiff Entertainment
-
தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் பதிவு செய்யும் புத்தகம்
11/07/2024 Duración: 05minDownload on Aurality https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality Listen via Google play https://play.google.com/store/audiobooks/details/Kamaraj_Mani_Thabaalthalai_Saathanaiyaalargal?id=AQAAAEBSg3LDMM இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி. எழுத்தாளர் காமராஜ் மணி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Kamaraj Mani Narrator: VVR Publisher: itsdiff Entertainment
-
மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார்.
10/07/2024 Duración: 09minDownload on Aurality https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality Listen via Google play https://play.google.com/store/audiobooks/details/Suka_Moongil_Moochu?id=AQAAAEDS6AeoxM மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா? வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி. - வண்ணதாசன் சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை
-
சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை பற்றிப் பேசும் இந்தப் புத்தகம்
10/07/2024 Duración: 06minGet it on Google play https://play.google.com/store/audiobooks/details/Sakthivel_Rajakumar_Subash_Chandra_Bose_Maraikkapp?id=AQAAAEDSNGF0oM Download in Aurality app - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏழு பத்தாண்டுகளில், ஒருவரின் மரணத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறிய மொத்தம் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டது சுபாஷுக்கு மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள், சுபாஷின் சாகசங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதி இருக்கிறார் சக்திவேல் ராஜகுமார். சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருகிறது. எழுத்தாளர் சக்திவேல் ராஜகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்க
-
சீனா படையெடுப்பும் அதன் பின்னணியும் Article 370 Indiyavin KAshmir
05/07/2024 Duración: 16minகாஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? Description: மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்? ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன? காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா? இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா? ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment
-
ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் DR உ.வே.சா
03/07/2024 Duración: 11minTamil Thaatha -நம் தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான மனிதர் ‘தமிழ்த் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். தமிழ் மொழியின் சொத்துகளான பல அரிய காப்பியங்களும் புராணங்களும் ஓலைச்சுவடிகளாகப் பல இடங்களில் முறையாகத் தொகுக்கப்படாமல் சிதறிக்கிடந்தன. அவற்றையெல்லாம், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினாலும், நமது இலக்கியங்கள் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினாலும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆராய்ந்து, தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்தார் உ.வே.சா. இவரது தன்னலமில்லாக் கடின உழைப்பினால்தான் பல காப்பியங்கள், பல அரிய நூல்கள் இன்று நம்மிடையே உள்ளன. இல்லையென்றால் இவையெல்லாம் என்றோ அழிந்து போயிருக்கும். ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் உ.வே.சா. அப்படிப்பட்ட பேரறிஞரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், தமிழ்ச் சேவைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நேர்த்தியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். எழுத்தாளர் சைதை முரளி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saidhai Murali Na
-
அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை Agasthiya Yathirai
02/07/2024 Duración: 09minவேதம் பிறந்தபோதே அகஸ்தியரும் தோன்றி விட்டார். இமயம் முதல் குமரி வரை அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை. விந்திய மலையைக் கடந்ததன் மூலம் பாரத தேசத்தில் வடமுனைக் கோடி இமயத்திலிருந்து தென்முனைக் கோடி பொதிகை வரையில் ஓர் மிகப் பெரிய இணைப்புப் பாலமாக அகஸ்தியர் விளங்கினார். சங்ககாலச் செய்யுள்களில் அகஸ்தியர் இடம் பெற்றுள்ளார். அகஸ்தியரின் பெயரைக் குறிப்பிடாமல் எந்தவொரு மருத்துவ நூலும் கடந்த நூற்றாண்டுகளில் இல்லை. பாரதத்தில் மட்டுமின்றி ஈழம், சாவகம், கடாரம், மலாய் நாடுகளிலும் அகஸ்தியர் குறித்த சான்றுகள் உள்ளன. அகஸ்தியரைக் குறித்துப் பற்பல தகவல்கள் செய்திகளாக, இலக்கியச் சான்றுகளாக, கட்டுக் கதைகளாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு அவரது இமயம் முதல் பொதிகை வரையிலான பயணத்தைக் கூறும் நூல் இது. சித்தராக, மருத்துவராக, தமிழுக்கு ஆதி இலக்கண நூல் படைத்தவராக அறியப்படும் அகஸ்தியரின் பயணத்தை முழுமையாக, இலக்கியச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன். எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sathiyapriyan Narrator: Bhavani Ana
-
பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள்
01/07/2024 Duración: 10minபரிந்தர குமார் கோஷ் - அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். ஸ்ரீ அரவிந்தரின் இளைய சகோதரர். ஏறத்தாழ 12 ஆண்டுகாலம் அந்தமானில் கொடுமையான தீவாந்தர தண்டனைக்கு உள்ளானவர். அவரது சிறை அனுபவங்களே இந்த நூல். அந்தமான் சிறை என்பது ஒரு நரகம். தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பது, செக்கிழுப்பது போன்ற கொடுமைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தற்கொலை முயற்சிகள், கைதிகளின் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் என உயிர்ப்போராட்டத்தின் வலி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்த அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த பரிந்தர், தனது சக சிறைவாசிகளான உல்லாஸ்கர் தத்தாவின் மனப்பிறழ்வு, இந்துபூஷன் ராயின் தற்கொலை, ஜதீஷ் சந்திரபாலுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். வலி நிறைந்த சிறை வாழ்க்கையினை விவரிக்கும் பரிந்தரின் சிறப்பு, சோதனைகளைக் கூட ‘இதுவும் ஓர் அனுபவம்’ என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம். இந்த உணர்வு நம்மை அதிசயிக்க வைக்கிறது. The tale of my exile என்று பரிந்தர் குமார் கோஷ் எழுதிய அனுபவங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஜனனி
-
அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்.: Arasiyal Anmiga MGR
30/06/2024 Duración: 04minஎம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது. எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது.
-
சத்ரபதி சிவாஜி - Chhathrapathi Shivaji
10/06/2024 Duración: 19minDownload FREE aurality ( mobile app for tamil audiobook) and podcasting - enjoy great tamil literature we have over 450 + content to help preserve rich indian tamil literature சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு. எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Author: Ananthasa
-
1919 Il Nadanthadhu ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள்
09/06/2024 Duración: 11minஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை. வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார். இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார். தன் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மண்டோ எழுதியது: ‘இங்கே ஸாதத் ஹ
-
Adolf Hitler - அடால்ஃப் ஹிட்லர்
08/06/2024 Duración: 20minListen to these and other wonderful tamil biography and historical content as audiobooks in Aurality app ( available on google play store and Apple store ) Aurality Infotainment Aurality அடால்ஃப் ஹிட்லர் எந்த ஒரு பெயரைக் கேட்டவுடனே உங்கள் மனதில் ஒரு வெறுப்பு பரவும் என்று கேட்டால், உலகம் முழுக்க அனைவரும் சொல்லும் பெயர் இதுதான். ஏன் அப்படி? கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஹிட்லருக்கு வந்தது? யூதர்களை ஏன் ஹிட்லர் வேட்டையாடினார்? உலகமே அஞ்சி நடக்கும் வதை முகாம்களை ஏன் உருவாக்கினார்? அங்கே மக்கள் எப்படி கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்? ஹிட்லரின் இறுதி 105 நாட்களில் நடந்தது என்ன? ஹிட்லரின் ஏழ்மையான இளமைக் காலம், அவரது அரசியல் எழுச்சி, அன்றைய உலக அரசியல் நிலை, இரண்டாம் உலகப் போர் அரசியல், அதைத் தொடர்ந்து இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வது வரையிலான ஒட்டுமொத்த வரலாற்றையும் விவரிக்கிறது இந்த நூல். ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் எழுதி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Auth
-
Sundar Pichai | சுந்தர் பிச்சை
08/06/2024 Duración: 09minDownload Aurality app for tamil audiobooks via google play and or apple play store Google - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர். இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும். எழுத்தாளர் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: G.S. Sivakumar Narr
-
All about Ayodhi - அயோத்தி (அ முதல் ஃ வரை)
07/06/2024 Duración: 11minமுன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை. அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை? பாபர் மசூதியின் வரலாறு என்ன? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை? இந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? அயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது. இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும். எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment
-
Scene 9 of 9 - Mohammad Bin Thuglaq Tamil Play (திரு. சோ அவர்களின் முகம்மது பின் துக்ளக்)
01/06/2024 Duración: 03minThis is a political Sattire written by Thiru Cho. Download free Aurality (mobile app for tamil audiobooks) - google play store, ios app store Disclaimer All views, opinions expressed through this play belongs to Mr.Cho and their playwright team and do not necessarily express as the participants in this play reading or that of the production team BArts and Aurality Sharing this for educational awareness purposes only