Sbs Tamil - Sbs

சுஜாதா 90: தமிழ், அறிவியல், திரை, இலக்கியம் குறித்த நேர்முகத்தின் மறு பதிவு

Informações:

Sinopsis

பல்லாயிரக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள் இருந்தாலும் “சுஜாதா” அவர்கள் தனித்துவமானவர். இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும், வகைகளிலும் எழுதி குவித்தவர் சுஜாதா. அறிவியலை எளிமைப்படுத்தி, ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்தியாவின் 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' விருது வழங்கி கெளரவித்தது. இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்கிய மிக முக்கிய பொறியாளர் சுஜாதா. பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சுஜாதாவின் 90 ஆவது பிறந்த தினம் மே 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுஜாதா அவர்கள் 2008 ஆண்டு மறையும் முன்பு 2005 ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு பதிவு இது.